ஆன்டர்சு செல்சியசு
From Wikipedia, the free encyclopedia
ஆன்டர்சு செல்சியசு (Anders Celsius, 27 நவம்பர் 1701 - 25 ஏப்ரல் 1744) சுவீடிய வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். 1730 முதல் 1744 வரை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இதே காலத்தில் 1732 முதல் 1735 வரை ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு நாடுகளிலிருந்த குறிக்கத்தக்க வான் ஆய்வகங்களுக்குச் சென்று வந்தார். 1741இல் உப்சாலா வானியல் ஆய்வகத்தை நிறுவினார். 1742இல் வெப்பநிலையை அளக்க செல்சியசு அளவுகோலை நிறுவினார்; இதனையொட்டியே இந்த அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் ஆன்டர்சு செல்சியசு, பிறப்பு ...
ஆன்டர்சு செல்சியசு | |
---|---|
ஆன்டர்சு செல்சியசு | |
பிறப்பு | (1701-11-27)27 நவம்பர் 1701 உப்சாலா, சுவீடன் |
இறப்பு | 25 ஏப்ரல் 1744(1744-04-25) (அகவை 42) உப்சாலா, சுவீடன் |
வாழிடம் | சுவீடன் |
தேசியம் | சுவீடியர் |
துறை | வானியல், இயற்பியல், கணிதம், புவியியல் |
கல்வி கற்ற இடங்கள் | உப்சாலா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | செல்சியசு |
கையொப்பம் |
மூடு