ஆங்கிலேய-நேபாளப் போர்
From Wikipedia, the free encyclopedia
ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) (Anglo-Nepalese War) (நேபாளி: नेपाल-अङ्ग्रेज युद्ध), பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் நோக்கில், நேபாள இராச்சியத்திற்கு எதிராக, கிபி 1814 - 1846 ஆண்டுகளில் தொடுத்த போராகும். போரின் முடிவில் இருதரப்பினரும், மார்ச், 1816 இல் சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினரால் பிற இராச்சியத்தினரிடமிருந்து கைப்பற்றியிருந்த (தற்கால) கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தரப்பட்டது.
மேற்கு தராய் பகுதி, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு நட்ட ஈடு வழங்க கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றும் நோக்கில் நேபாள இராச்சியத்தின் மீது படையெடுத்தனர். இதற்காக கம்பெனி ஆளுநர் மொய்ரா அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று.