அம்பன்காலை
From Wikipedia, the free encyclopedia
அம்பன்காலை (Ambankalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு என்ற ஊருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு விவசாயம் தான் முக்கிய தொழிலாகும். வாழை, தென்னை, மிளகு போன்ற பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1]