அந்திமந்தாரை
ஒரு வகை மலர்ச்செடி / From Wikipedia, the free encyclopedia
அந்திமந்தாரை (ஒலிப்புⓘ) (Mirabilis Jalapa) அந்தியில் மலர்வதால், இது அந்திமந்தாரை அல்லது அந்திமல்லி என்று அழைக்கப்படுகின்றது. இது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவைக் கொண்ட தாவரம் ஆகும். இதுவே பெருவின் அதிசயம் (Marvel of Peru) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது.
அந்திமந்தாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
வரிசை: | |
குடும்பம்: | நிக்டாஜினச்சே |
பேரினம்: | மிராபிலிசு |
இனம்: | M. jalapa |
இருசொற் பெயரீடு | |
Mirabilis jalapa லி. | |
இதற்குத் தாவரவியலில் மிராபிலிஸ் ஜலாபா Mirabilis Jalapa Linn என்று பெயர். ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி (Specific Epith). இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydae) இருவித்திலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் (Nyctaginacae) சார்ந்தது, இதன் தாயகம் தென் அமெரிக்கா என்று கூறப்படுகின்றது.
இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்தத் தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். குருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும். இதன் இலைச்சாறு காயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாகக் கருதப்படுகிறது.[1]