அணு ஆயுதப்போர் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
அணுவாயுதப் போர் (Nuclear warfare) அல்லது அணு ஆயுதப்போர் நடவடிக்கை என்பது போர்த்திறஞ்சார்ந்த விமானங்கள் வழியாகவும், செல்லும் வழியைக் கட்டுப்படுத்திச் செலுத்தப்படும் ஏவுகணைகள் (guided missiles) வழியாகவும், பூமியைச் சுழன்று வரக்கூடிய துணைக் கோள்கள் (Earth satilites) வழியாகவும் அல்லது வேறு எந்த போர்த்திறம் சார்ந்த, எடுத்துச் சென்று வழங்கிடும் அமைப்புகள் (Strategic delivery systems.) வழியாகவும், அணு குண்டுகள் கொண்டு செல்லப்பட்டு வீசப்படுவதாகும்.இது அணுக்கருப் படைக்கலங்களை வைத்திருப்பதற்கான கோட்பாட்டுநிலை படைத்துறைப் பூசல் அல்லது ஆயத்தநிலை அரசியல் செயல்நெறிமுறை ஆகும். அணுவாயுதங்கள் பெருந்திரள் மக்களைக் கொல்லும் ஆய்தங்களாகும்; மரபான போர் நடவடிக்கைகளை ஒப்பிடும்போது, இவை மிகக் குறுகிய நேரத்தில் பேரழிவையும் நெடுங்காலத் தொடர்கதிர்வீச்சுப் பொழிவு விளைவுகளையும் தரவல்லன. அணுகுண்டு வெடிப்புக்குப் பிறகு பொழியும் அல்லது விடுவிக்கப்படும் அணுக்கருக் கதிவீச்சு நெடுங்கால விளவுகளைக் கொண்டிருக்கும். இது மேலும் "அணுக்கருக் கூதிர்காலம்",[1][2][3][4][5][6] அணுக்கரு வற்கடம்(பஞ்சம்), சமூகக் குலைவு போன்ற துனைவிளைவுகளுக்கும் வழிவகுக்கும்.[7][8][9] பனிப்போர்க் கால அணுவாயுத இருப்புகள் உலக வெப்ப அணுக்கருப் போருக்கு வழிவகுத்துவிடு வாய்ப்புள்ளன ஆகும் ; ஏன் இப்போதுள்ள சிறு சிறு அணுப்படைக்கலங்களும் கூட, முழுமாந்தரின அழிவு போன்ற பல பேரிடர்களை உருவாக்கிவிட வல்லன.[10]
இதுநாள் வரை, ஆயுதப்போராட்டத்தில் அணுவாயுதங்களைப் பயன்படுத்தியது, 1945 இல் ஈரோழ்சிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது மட்டுமே. "சிறுபையன்" எனும் பெயரில் ஓர் யுரேனிய அணுகுண்டு1945, ஆகத்து 6 இல் யப்பானிய நகரமான ஈரோழ்சிமா மீது வெடிக்கப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு,கஆகத்து 9 இல் " குண்டன்" எனும் பெயரில் ஒரு புளூட்டோனிய அணுகுண்டு யப்பானிய நகரமாண நாகசாகி மீது வெடிக்காப்பட்டது. இந்த இரு அணுகுண்டு வெடிப்புகளில் தோராயமாக 200,000 பேர் இறந்துவிடானர். இதனால், யப்பான் அடிபணிந்து விட்டதால், போரில் மீண்டும் அணுவாயுதம் எதையும் பயன்படுத்தவொட்டாமல் செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் ஒன்றியமும், 1949 இல் அணுவாயுதங்களைத் தனி அணுவாயுதத் திட்டத்தின்வழி உருவாக்கியது; ஐக்கிய அரசு 1952 இல் அணுவாயுதங்களை வுருவாக்கியது; பிரான்சு 1960 இல் அணுவாயுதங்களை உருவாக்கியது; சீன மக்கள் குடியரசு 1964 இல்அணுவாயுதங்களை உருவாக்கியது. இந்நிலை நாடுகலிடையே முரண்பாட்டையும் பன்னாட்டு உறவில் இறுக்கநிலையையும் ஏற்படுத்தி, பனிப்போர்ச் சூழலை உருவாக்கியது. அதற்குப் பிறகு, எலியும் பூனையுமாக இருந்த இந்தியா 1974 இலும் பாக்கித்தானம் 1998 இலும் அணுவாயுதங்களை உருவாக்கின.னைதே போல, இசுரவேல் 1960 இலும் வட கொரியா 2006 இலும் அணுவாயுதங்களை உருவாக்கின. இசுரவெலின் அரசு அணுவாயுதங்களை வுருக்கியதை ஏர்கவோ அல்லது மறுக்கவோ இல்லை; ஆனால், இது அணு உலைகளைக் கட்டியமைத்தது; அணுவாயுதங்களை உருவாக்க உதவும் மீள்செயலாக்க நிலையத்து நிறுவியது.[11] தென் ஆப்பிரிக்காவும் பல அணுவாயுதங்களை உருவாக்கியது; ஆனால், பிறகு தானாகவே தான் உருவாக்கிய அணுவாயுதங்களை அழித்த முதல் நாடாகி, மேலும் 1990 களில் அணுவாயுதவாக்கத்தைத் தவிர்த்தது. செயல்விளக்கத்துக்காகவும் சோதனைக்காகவும், இதுவரை 2000 தடவைகள் அணுவாயுதங்கள் வெடிக்கப்பட்டுள்ளன.[12][13]
சோவியத் ஒன்றியம் 1991 இல் கலைக்கப்பட்டு ப் பனிப்போர் முடிவுற்றதும், இருபெரும் வல்லரசுகலுக்கிடையிலான அணுவஔதப் போர் அச்சுறுத்தல் பொதுவாக குறைந்துவிட்டதாக கருதப்பட்டது.[14] இதிலிருந்து, அணுவாயுதங்கள் சார்ந்த அக்கறை, அணுவாய்தப் பெருக்கத்தால் பகைநாடுகளைடையிலான அணுவாயுதப் போரைத் தவிர்ப்பதிலும் அணுவாயுத அச்சுறுத்தல்வாதத்திலுமே கவனம் செலுத்தியது. என்றாலும், உருசிய்ய உக்கிரைன் மீது முற்றுகையிட்ட பிறகு, அணுவாயுதப் போர் மீளெழுச்சி காணலானது.[15][16]
1947 இல் இருந்து, அணுவியலாளரது செய்தியிதழ், பேரழிவுநாள் கடிகார நேர அமைவு உலகம் அணுக்கருப் போருக்கு எவ்வளவு நெருக்கமாக வந்துவிட்டது என நெடுநோக்கோடு கணித்துவருகின்றது. இது 1953 இல் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நீரகக்(ஐதரசன்) குண்டுகளை வெடித்துச் சோதித்ததும் மிக உய்ர்நெருக்கடியுற்று, பேரழிவுநாள் கடிகார நேர அமைவு நள்ளிரவுக்கு முன்னதாக இருமணித்துளிகளாக அமைந்தது. பின்னர், இது 2018 இல் இருந்து, அணுவாயுதங்கள், காலநிலை மாற்றம் குறித்து உலகத் தலைவர்கள் தம்மிடையிலான அரசியல் இறுக்கத்தைக் குறைப்பதில் தோல்வியுற்றதும், மீளவும் பேரழிவுநாள் கடிகார நேர அமைவு நள்ளிரவுக்கு முன்னதாக இருமணித்துளிகளாக அமைந்தது.[17] பேரழிவுக் கடிகார நேர அமைவு, 2023 இல் நள்ளிரவுக்கு 90 நொடிகள் முன்னதாக, இதுவரை எப்போதும் இலாத அளவுக்கு நெருக்கமாக அமைந்துள்ளது.[18] பெரிதும் மிக அண்மைய காலத்தில் பேரழிவுக் கடிகார நேர அமைவு முன்னேற்றம் கண்டதற்கு உருசியாவின் உக்கிரைன் முற்றுகையே பெரிதும் காரணமானது.[19]