அக்பர்
மூன்றாம் முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1556 - 1605) / From Wikipedia, the free encyclopedia
பேரரசர் அக்பர் (Akbar the Great,[12] பாரசீக மொழி: اکبر اعظم, பாரசீக உச்சரிப்பு: அக்பர்-இ-ஆசம், பொருள்: மகா அக்பர்) என அழைக்கப்படும் அபூல் பாத் சலாலுத்தீன் முகம்மது அக்பர் (Abu'l-Fath Jalal-ud-din Muhammad Akbar,[9] 25 அக்டோபர் 1542[lower-alpha 1] – 27 அக்டோபர் 1605),[13][14][15] என்பவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 வரை ஆட்சி புரிந்தார். இவர் தன் தந்தை உமாயூனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இவருக்கு வயது குறைவாக இருந்ததால் பைராம் கான் அரசப் பிரதிநிதியாக ஆட்சியைக் கவனித்துக் கொண்டார்.
சலாலுத்தீன் முகம்மது அக்பர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பாடிஷா[1] | |||||||||
அக்பரின் ஓவியம். ஓவியர் கோவர்த்தனன். ஆண்டு அண். 1630. | |||||||||
முகலாயப் பேரரசின் 3வது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 11 பெப்ரவரி 1556 – 27 அக்டோபர் 1605[2][3] | ||||||||
முடிசூட்டுதல் | 14 பெப்ரவரி 1556[2] | ||||||||
முன்னையவர் | நசிருதீன் உமாயூன் | ||||||||
பின்னையவர் | ஜஹாங்கீர் | ||||||||
பிரதிநிதி | பைராம் கான் (1556–1560)[4] | ||||||||
பிறப்பு | சலாலுத்தீன் முகம்மது அக்பர் 25 அக்டோபர் 1542[lower-alpha 1] உமர்கோட், இராசபுதனம் (தற்போதைய உமர்கோட், சிந்து மாகாணம், பாக்கித்தான்) | ||||||||
இறப்பு | 27 அக்டோபர் 1605(1605-10-27) (அகவை 63) பத்தேப்பூர் சிக்ரி, ஆக்ரா, முகலாயப் பேரரசு (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) | ||||||||
புதைத்த இடம் | நவம்பர் 1605 அக்பரின் சமாதி, சிக்கந்தரா, ஆக்ரா | ||||||||
வாழ்க்கைத் துணைகள் | |||||||||
துணைவியர்கள் |
| ||||||||
குழந்தைகளின் #பிள்ளைகள் |
| ||||||||
| |||||||||
மரபு | பாபர் குடும்பம் | ||||||||
அரசமரபு | தைமூரிய அரசமரபு | ||||||||
தந்தை | நசிருதீன் உமாயூன் | ||||||||
தாய் | அமீதா பானு பேகம் | ||||||||
மதம் | சன்னி இசுலாம்,[10][11] தீன் இலாகி |
ஒரு வலிமையான ஆளுமையாகவும் வெற்றிகரமான தளபதியாகவும் திகழ்ந்த அக்பர் படிப்படியாக முகலாயப் பேரரசை விரிவுபடுத்தி பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை முகலாயப் பேரரசுக்குள் கொண்டுவந்தார். எனினும், அக்பரின் சக்தியும் செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் முகலாய இராணுவ, அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகும். பரந்த முகலாய அரசை ஒன்றுபடுத்த தனது பேரரசு முழுவதும் ஒரு மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை அக்பர் நிறுவினார். மேலும், திருமணங்கள் மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மூலம் வெல்லப்பட்ட மன்னர்களை சமரசப்படுத்தும் கொள்கையை அக்பர் பின்பற்றினார். மத மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்டிருந்த பேரரசில் அமைதி மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க இவர் பின்பற்றிய கொள்கைகளை அனைத்து மக்களும் ஆதரித்தனர். பழங்குடியின இணைப்புகளைத் தாண்டி தனது பேரரசில் இருந்த தொலைதூரப் பகுதிகளை இணைக்க விசுவாசத்திற்கு அக்பர் மதிப்பளித்தார். தன்னை ஒரு பேரரசராக நிலைநிறுத்தி, இந்திய-பாரசீகக் கலாச்சாரத்தின் மூலம் இதைச் செயல்படுத்தினார்.
முகலாய இந்தியாவானது ஒரு வலிமையான மற்றும் நிலையான பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டது. இது வணிக விரிவாக்கம் மற்றும் கலாச்சாரத்திற்குப் பெரிய புரவலத் தன்மைக்கு வழிவகுத்தது. கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஆதரவாளராக அக்பரும் திகழ்ந்தார். அக்பருக்கு இலக்கியங்களைப் பிடிக்கும். இதன் காரணமாகப் பல்வேறு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலைஞர்கள், அழகிய கையெழுத்தில் எழுதுபவர்கள், வேதபாரகர், புத்தகப்பிணைப்பாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் ஆகியவர்களால் சமசுகிருதம், உருது, பாரசீகம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் காஷ்மீரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 24,000 தொகுதிகளை உடைய ஒரு நூலகத்தை உருவாக்கினார். இந்தப் புத்தகங்களை அட்டவணைப்படுத்தும் பொறுப்பைத் தானே முன்னின்று மூன்று முக்கியக் குழுக்கள் மூலம் செய்தார்.[16] பெண்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நூலகத்தையும் பத்தேப்பூர் சிக்ரியில் அக்பர் நிறுவினார்.[17] கல்விக்காகப் பள்ளிகள் தனது பேரரசு முழுவதும் நிறுவப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். புத்தகப்பிணைப்பானது ஒரு உயர் மதிப்புடைய கலையாக உருவாக அக்பர் ஆதரவளித்தார்.[16] பல்வேறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், கவிஞர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் படிப்பதற்கும், விவாதம் செய்வதற்கும் உலகம் முழுவதும் இருந்து அக்பரின் அவைக்கு வந்து அலங்கரித்தனர். தில்லி, ஆக்ரா மற்றும் பத்தேப்பூர் சிக்ரி ஆகிய இடங்களிலிருந்த அக்பரின் அவைகள் கலைகள், கடிதங்கள் மற்றும் கற்பித்தலின் மையங்களாக மாறின. பாரசீகக் கலாச்சாரமானது உள்நாட்டு இந்தியப் பழக்கவழக்கங்களுடன் இணைய ஆரம்பித்தது. இவ்வாறாக, முகலாயப் பாணி கலைகள், ஓவியங்கள் மற்றும் கட்டடக்கலை ஒரு தனித்துவமான இந்திய-பாரசீகக் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக உருவாக ஆரம்பித்தது. தனது பேரரசுக்குள் மத ஒற்றுமையை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் அக்பர் தீன் இலாகி என்ற சமயத்தை பிரகடனப்படுத்தினார்.
இந்திய வரலாற்றின் போக்கை அக்பரின் ஆட்சியானது பெருமளவு மாற்றியது. அக்பரின் ஆட்சியின் போது முகலாயப் பேரரசின் அளவு மற்றும் செல்வமானது மும்மடங்கானது. ஒரு வலிமையான இராணுவ அமைப்பை உருவாக்கிய அக்பர் பயனுள்ள அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களையும் தொடங்கிவைத்தார். சமசுகிருத இலக்கியங்களை மொழிபெயர்த்த அக்பர் உள்ளூர் விழாக்களிலும் பங்கெடுத்துக் கொண்டார். ஒரு நிலையான பேரரசு என்பது பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதை அக்பர் அறிந்திருந்தார். இவ்வாறாக, முகலாய ஆட்சியின் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட பேரரசின் அடித்தளமானது அக்பரின் ஆட்சியில் தான் நிறுவப்பட்டது. அக்பருக்குப் பிறகு இவரது மகன் இளவரசர் சலீம் ஆட்சிக்கு வந்தார். அவரே பின்னாளில் ஜஹாங்கீர் என்று அழைக்கப்பட்டார்.